Monday, October 31, 2005

மன்னிப்பு, ஓய்வு, நன்றி

காஞ்சிபுரம் பற்றி வலையில் தேடிப்போக , காஞ்சி பிலிம்ஸ் பதிவின் மூலமாய் தமிழ் மணம் தெரிய வந்தது.
இந்த மூன்று மாதத்தில் நிறைய எழுதி ஆகிவிட்டது இந்த இடத்திலும் , அந்த இடத்திலும் பின்னூட்டங்கள் நிறைய விட்டாகிவிட்டது. பலரின் மனதையும் காயப்படுத்தி ஆகிவிடிட்டது. சம்பத்தப்பட்ட ஒவ்வொருவராய் பெயர் சொல்லி மன்னிப்பு கேட்க நேரம் ஆகும்,இடம் பத்தாது என்பதால் பொதுவில் ஒரு மன்னிப்பு.தெரிந்தோ தெரியாமலோ பலரின் மனதை புண்படுத்தி இருக்கிறேன். விளையாட்டு பல நேரங்களில் வினையாகவும் ஆகி விடுகிறது.


தவறு செய்வது மனித இயல்பு , புண்படுத்தாமல் எழுதுவது கடினம்
என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது என்றாலும், இணையத்தில் இந்த மூன்று மாதங்கள் எழுதியது, தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்பதை நன்றாகவே உணர்த்தியது. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பார்களாக.

நடசத்திர வாரம் முடிந்தவுடன், அலுவலக வேலையாய் தலமை அலுவலகம் இருக்கும் Paris செல்லும் இந்த நல்ல சந்தர்ப்பமும் வாய்த்து இருக்கிறது.அங்கிருந்து அப்படியே இந்தியாவிற்கு செல்லவும் திட்டம். மனைவியுடன் செல்ல இந்த முறை வாய்ப்பு அளித்த மேலாலளருக்கு நன்றி . வேலையும் ஆச்சு, விடுமுறையும் ஆச்சு.கடந்த சில நாட்களாக இங்கேயே அதிக நேரம் செலவழித்து விட்டதால், தனிப்பட்ட, அலுவலக வேலைகள் நிறைய முடிக்கப்படாமல் இருக்கின்றன. அதையும் முடிக்க வேண்டும்.


பின்னூட்டம் அளித்து ஊக்குவித்த அனவருக்கும் நன்றி.

நட்சத்திர வாரத்துக்கு வாய்ப்பு அளித்த மதிக்கு நன்றிகள்


அனைவருக்கும் தீபாவளி, கிரிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

விடுமுறை கழித்து மீண்டும் சந்திப்போம்.

நன்றி.

( கொஞ்ச நாள் , பின்னூடங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் மூடி வைத்து இருக்கிறேன். ஏற்கனவே இருக்கும் பின்னூடங்கள் "பத்திரமாகவே" இருக்கின்றன. இதுவரை வந்த பின்னூடங்களுக்கு பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். )